கும்பகோணம், ஜூலை 10 தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் கும்பகோணம் வட்ட கிளை பேரவை வட்டத் தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள். இரா.ராஜகோபாலன்,சொ.சண்முகம் மாவட்ட துணைத்தலைவர் பழ.அன்புமணி ஆகியோர் பேசினர். இதில் தமிழகத்தின் தலை சிறந்த மருத்துவராக தேர்வு செய்து தமிழக அரசால் பாராட்டுப்பெற்ற கும்பகோணம் தலைமை மருத்துவர் டாக்டர்.பிரபாகரனுக்கு வாழ்த்தி கௌரவிக்கப்பட்டது. சங்கத்தின் மூத்த உறுப்பினரும் சின்னத்திரை நாடக நடிகருமான பொது சுகாதாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உடல் தானம் செய்த ராமசாமிக்கு 75வது பிறந்தநாள் வாழ்த்து கூறி கௌரவிக்கப்பட்டது கும்பகோணத்தில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர்கள் பயன்பெறும் வகையில் உயர்தர சிகிச்சை அளிப்ப தற்கு தனி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உரு வாக்கிட வேண்டும் கும்பகோணம் தலைமை மருத்துவ மனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற தனி வார்டு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.