திருச்சிராப்பள்ளி, மே 30 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்ட மாநாடு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை பாலக்கரை பகுதியில் கலை இலக்கிய திருவிழா நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பி னர் முத்துநிலவன் சிறப்புரை யாற்றினார். மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு இளங்குமரன், கீரை தமிழன், சிவ. வெங்கடேஷ், ஹரிபாஸ்கர், ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர். கவி ஞர் வெற்றி நிலவனின் ‘சங்கத்திடல்’ ஆவணப் படத்தின் முன்னோட்டத்தை மாதவன் வெளியிட்டார். கவி ஞர் ம.செ.எழுதிய ‘வெயில் மரங்கள்’ கவிதை நூலை மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி வெளியிட்டார். சாதி பெயர்களில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கலை நிகழ்ச்சி களை நடத்த அரசே அரங்கங் கள் அமைத்து குறைந்த வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக சிவ.வெங்க டேஷ் மாவட்ட செயலாளராக வி.ரங்கராஜன், மாவட்ட பொருளாளராக ஹரி பாஸ்கர், துணைத் தலைவர்க ளாக கவிஞர் இளங்குமரன், காளிராஜ், துணைச் செயலா ளர்களாக எழுத்தாளர் சீத்தா, பூவிழி தென்றல் உள்ளிட்ட 31 பேர் கொண்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில இணை பொதுச் செயலாளர் களப்பிரன் நிறைவுரை ஆற்றினார்.