மயிலாடுதுறை, பிப்.7 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகி லுள்ள கீழையூர் - செம்பதனிருப்பு இணைப்பு சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்தே கிடப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்பனார்கோவில் பகுதிகளிலிருந்து சீர்காழிக்கு எளிதாக செல்ல பயன்படக் கூடிய செம்பதனிருப்பு வழியாக செல்லும் தார்ச்சாலை கடந்த பல ஆண்டுகளாக முற்றிலும் பழு தடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சீரமைக்கக் கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அலட்சியப்படுத்து வதாக கூறும் அப்பகுதியினர், பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.