districts

img

பட்டியல் வகுப்பு மக்களின் நிலம் ஆக்கிரமிப்பு

கரூர், அக்.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித் தலை ஒன்றியக் குழு சார்பில், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ தலை மையில் குளித்தலை கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அம்மனுவில், “கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இனூங்கூர் காசா காலனி யில் வசிக்கும் பட்டியல் வகுப்பு மக்களுக்கு  நல்லூர் கிராமத்தில் 1997 ஆம் ஆண்டு, 49 பேருக்கு நில உச்ச வரம்பு திட்டத்தின்கீழ் நில ஒப்படைப்பு செய்யப்பட்டது. அந்த நிலத்தில்  சிறிது காலம் சாகுபடி செய்து வந்தார்கள். வானம் பார்த்த பூமி என்பதால் பருவமழை இல்லாத போது, விவசாயம் செய்ய  முடியவில்லை.  இதற்கிடையில் சில சாதி ஆதிக்க சக்திகள் தலையிட்டு, நிலத்தின் சர்வே கல்லை அகற்றி விட்டதால், நில அடையாளங்கள் அழிக்கப்பட் டன. இதனால் நிலத்தின் அடையா ளம் தெரியாமல் உள்ளது. மேலும்  சம்பந்தப்பட்ட மக்களை நிலத்திற் குள் நுழைய விடாமலும் தடுத்து விட்டனர். இதனால் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் இந் நிலத்தை பயன்படுத்த முடியவில்லை. உடன டியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை  எடுத்து, நிலத்தை மீட்டு நில உரிமை யாளர்களுக்கே வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.  மனு அளிக்கும் போது, குளித்தலை ஒன்றி யக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளைச்  செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.