தஞ்சாவூர், ஏப்.30-
மயிலாடுதுறையில் இருந்து பட்டுக் கோட்டை-காரைக்குடி-மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில் இயக்க வேண்டு மென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம் ஆகியோர் சனிக்கிழமை தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில், ‘‘திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, முத்துப்பேட்டை அதிராம்பட்டினம், பட்டுக் கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதியில் இருந்து மதுரைக்கு நேரடி ரயில் வசதி இல்லை. மதுரைக்கு ஆன்மீகச் சுற்றுலா, அலுவலகங்கள், உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களுக்கு ரயிலில் செல் வோர் தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி சென்று மதுரை செல்கின்றனர்.
பயணிகள் நலன் கருதி மயிலாடுதுறை யில் இருந்து பட்டுக்கோட்டை, பேரா வூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானா மதுரை வழியாக மதுரைக்கு இரு மார்க்கத்தி லும் ரயில் இயக்க வேண்டும்’’ எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.