districts

img

திருச்சி விமான நிலையத்தின் ஓடுதளம் விரிவாக்கத்தை விரைந்து முடிக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.7 - திருச்சி விமான நிலையத்தின் ஓடு தளம் விரிவாக்கம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோ ரிக்கை வைத்துள்ளேன் என்றார் துரை.வைகோ. மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணை யத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில்  பல்வேறு கோரிக்கைகளை வைத்து உள்ளேன். திருச்சி விமான நிலையம்  சர்வதேச தரத்துடன் அமைந்து உள்ளது. அதே நேரத்தில் அங்கு போதிய ஓடுதளம் இருந்தால் தான் விமானங்கள் வந்து செல்ல முடி யும். எனவே ஓடுதள விரிவாக்கப் பணி களை விரைந்து முடிக்க கோரிக்கை  வைத்துள்ளேன்.  விமான நிலையத்தில் இஸ்லாமி யருக்கு தொழுகைக்கு இடம் ஒதுக் கீடு செய்ய வேண்டும். இ-வாகன  சேவை கொண்டு வர வேண்டும். கார்கோ விமானம் இயக்க பரிசீ லனை செய்ய வேண்டும். விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்வதற்கான அதிகாரிகள் குறை வாக உள்ளனர். பயணிகள் வருகை அதிகளவில் இருப்பதால், மேலும் பல அதிகாரிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளேன். திருச்சி விமான நிலைய விரி வாக்கப் பணிகள் 95 சதவீதம் முடிந்து  விட்டன. மீதமுள்ள 5 சதவீத பணி களை துரிதப்படும் வகையில் பேசி  வருகிறோம். திருச்சி விமான நிலை யத்தில் சமஸ்கிருதத்தில் பெயர்  பலகை இருந்தது தேவையில்லாத ஒன்று. இதை படித்தால் பயணி களுக்கு எதுவும் தெரியாது. தற்சம யம் மூன்று பேருந்துகள் விமானப் பய ணிகளை ஏற்றி, இறக்கிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமான  நிலையத்தில் நிரந்தர பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். வக்பு வாரிய சட்டத் திருத்தம் தேவையில்லை. சென்னையில் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு பேசி யது தன்னம்பிக்கை சொற்பொழிவு அல்ல; மூடநம்பிக்கை சொற்பொ ழிவு. இவர் இந்து மத பெயரை கூறி  பிழைப்பு நடத்துகிறார். இந்த விஷ யத்தில் மகா விஷ்ணுவை அழைத்து  வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி சிறப்பாக செயல்பட்டு வருகிறார், பூரண மதுவிலக்கு கொள் கையை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. படிப்படியாக மதுக்கடையை மூட  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மதவாத சக்தி வேரூன்றக் கூடாது. இவ்வாறு துரை வைகோ கூறினார். பேட்டியின் போது மாநில துணை  பொதுச் செயலாளர் ரொகையா, மாவட்டத் தலைவர்கள் வெல்ல மண்டி சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ் மாணிக்கம், மாவட்ட  துணைச் செயலாளர்கள் எல்லக்குடி அன்புராஜ், துரை வடிவேல், பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன், முருகன், ஆடிட்டர் வினோத், கோ பாலகிருஷ்ணன், வட்டச் செயலா ளர் சாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.