districts

img

கோரையாற்றில் வெங்காயத் தாமரைகளை அகற்ற கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஜூலை 22 -

      திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோரையாற்றில் வெங்காயத் தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவற்றை அகற்ற வேண்டும். வெங்காயத்தாமரை அதிகமாக இருப்பதால், விஷப்பூச்சிகளின் உற்பத்தி யாகி அதிகமாகின்றன. இதனை அகற்றக் கோரி பல முறை கோரியும் மாவட்ட  நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை.  

   இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கள்ளிக்குடி யில் மாபெரும் சாலை மறி யல் போராட்டம் நடைபெற் றது. ஒன்றியச் செயலாளர் ே.பழனிச்சாமி தலைமை வகித்தார். கிளைச் செயலா ளர் கே.கைலாசமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.இராஜேந்திரன் மற்றும் ஒன்றியக் குழு-கிளை உறுப்பினர்கள் பங் கேற்றனர்.  

   பின்னர் மறியல் நடந்த இடத்திற்கு வந்த சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர், சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டு கோரிக்கையை உடன டியாக நிறைவேற்றுகிறோம் என உறுதியளித்தனர்.