படைவீரர்கள் குறைதீர் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை
தஞ்சாவூர், ஜூலை 12- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இதில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அதனைச் சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 32 மனுக்கள் பெறப் பட்டன. மேலும், முன் னாள் படைவீரர் நலத் துறை சார்பில் 6 நபர் களுக்கு ரூ.1,60,000 மதிப் பில் கல்வி உதவித்தொ கைக்கான காசோலை யினை மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் வழங் கினார். இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவற்றைச் சார்ந்தோர்கள் என 82 பேர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கல்
அறந்தாங்கி, ஜூலை 12 - காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய, மாநில அமைச் சருமான திருநாவுக்கரசர் பிறந்தநாளையொட்டி, புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோ விலை அடுத்த பெரு மருதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாவட்ட கவுன்சிலர் சுப்பி ரமணியன் ஏற்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு இலவச புத்தகப்பை மற்றும் நோட்டு, பென்சில், இனிப்புகள் வழங்கப்பட் டன. நிகழ்ச்சியில் பள்ளி யின் தலைமை ஆசிரியர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காப்பீட்டு திட்ட குறைகளை களைய கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜூலை 12- தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க திருச்சிராப் பள்ளி மாவட்ட செயற் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முனைவர் பால்பாண்டி தலைமை யில் நடைபெற்றது. சங்க செயல்பாடு குறித்து மாவட்டச் செய லாளர் பாபு பேசினார். உரிய மருத்துவ காப் பீட்டு தொகை வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறை பாடுகளை களைய வேண் டும். கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் ஆகிய வற்றை வலியுறுத்தி மாவட்ட அளவில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட இணைச் செய லாளர் அல்போன்ஸ், திருச்சி 2, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மண்ணச்ச நல்லூர், முசிறி மற்றும் துறையூர் வட்டக்கிளை நிர்வாகிகள் பேசினர். மாவட்ட இணைச் செய லாளர் அமுதவல்லி மக ளிர் துணைக் குழு அமைப்பாளராக (பொ றுப்பு) தேர்வு செய்யப் பட்டார். மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினார். சத்தியவாணி ஏற்புரை வழங்கினார்.
வேங்கராயன்குடிக்காட்டில் 300 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு
தஞ்சாவூர், ஜூலை 12- தஞ்சாவூர் அருகே, காசவளநாடு வேங்கராயன்குடிக் காடு வடக்குத் தெருவில் வசிப்பவர்கள் தங்களது குல தெய்வமான பட்டவன் சுவாமியை வழிபட்டு வருகின்றனர். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒதியன் மரத்தடியில் மட்டுமே கும்பம் வைத்து, அதில் விளக்கேற்றி வழிபட்டு வந்த னர். நான்கு தலைமுறைகளாக வழிபட்டு வந்த பட்டவன் சுவாமிக்கு கோயில் கட்ட தெருவாசிகள் முடிவு செய்து, கடந்த சில ஆண்டுகளாக அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து புதிதாக பட்டவன், லாடசன்னாசி, பெரிய கருப்பு, சின்ன கருப்பு, வடுவச்சி அம்மன், மதுரை வீரன், பேச்சியம்மன், செம்முனி மற்றும் முன்னோடியான் ஆகிய பரி வாரத் தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப் பட்டன. இந்நிலையில் பட்டவன் சுவாமி கோவில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை மாலை தொடங்கியது. கிராமத்தின் புண்ணியதீர்த்தமான காசாம்பள்ளம் குளத்திலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் யாகசாலை மண்டபத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, காவிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, வெள்ளிக் கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலை மண்டபத்திலிருந்து அங்கிருந்து புனித நீர் அடங்கிய கடங்கள், கோவிலில் ஒவ்வொரு சன்னதிக்கும் சென்றன. பின்னர் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உறுதி
கரூர், ஜூலை 12 - கல்லடை கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உறுதி அளித்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், கல்லடை கிராமத்தில் மக்க ளின் அடிப்படை தேவைகளான புதிய கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பழுதடைந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ வெளியூர் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. கட்சி கிளையின் சார்பில் போராட் டத்திற்கான ஆயத்த பணிகள் நடை பெற்றதை தொடர்ந்து கோரிக்கையில் ஒன்றான கீழ வெளியூரில் கிராம நிர்வாக அலுவலர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாக நிறை வேற்றப்பட்டது. அதன்படி, கிராம நிர்வாக அலுவலரை நியமிப்பதற்கான அறிவிப்பை கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் ஒன்றிய ஆணை யர் ராஜேந்திரன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சக்திவேல், ஒன்றியச் செயலாளர் ஏ. சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ஏ.வடிவேல், ஆர்.அரிராமன், ஆர்.செல்வராஜ், கீழவெளியூர் கிளைச் செயலாளர் எம்.பாலு, பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது, ஒரு மாதத்துக்குள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வேலை தொடங்கப்படும். மற்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று அரசு அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
மேலூர் அருகே பெண் வெட்டி படுகொலை
மதுரை, ஜூலை 12- புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வர்கள் அழகு (60) மற்றும் பாப்புரம்மாள்(50). இவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சி ராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, தங்கி இருந்து தென்னை விளக்குமாறு சேகரித்து மொத்தமாக சென்னைக்கு சென்று வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், கச்சிராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, தலையில் வெட்டு காயங்களுடன் பாப்பு ரம்மாள் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரது கணவர் அழகு தலை மற்றும் உடல் பகுதிகளில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். தகவலறிந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழகுவை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த பாப்புரம்மாள் உடலை பிரேத பரி சோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணல் மாட்டு வண்டி ரீச் திறக்கக் கோரி தொடர் போராட்டம்
சிஐடியு முடிவு திருச்சிராப்பள்ளி, ஜூலை 12 - திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி சங்க ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி சங்க மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், லாரி செட் சங்க செயலாளர் ராமர், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் ஆகி யோர் பேசினர். திருச்சி மாவட்டத்தில் மண்ணச்ச நல்லூர், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர் ஆகிய 6 தாலுகாவைச் சேர்ந்த 5ஆயிரத்திற்கும் மேற் பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளி டம் ஆற்றுப் பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கிளிக்கூடு, கொண்டையம் பேட்டை, தாளக்குடி, மாதவ பெருமாள்கோவில் ஆகிய இடங்கில் செயல்பட்டு வந்த மணல் மாட்டு வண்டி மணல் ரீச் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மணல் மாட்டு வண்டி தொழி லாளர்களை பாதுகாக்கும் வகையில் மணல் மாட்டு வண்டி ரீச்களை திறக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது, முதற்கட்டமாக ஜூலை 18 அன்று வெஸ்ட்டி பள்ளி ரவுண்டானாவிலிருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று, ஆட்சி யரிடம் மனு கொடுப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் லால்குடி மாணிக்கம், நொச்சியம் ரவி, கம்பை மோகன், திருவானைக்காவல் ராஜேந்திரன், அல்லூர் குமார் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.