districts

முயல் வேட்டைக்கு அனுமதி வேண்டும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை

கோபி, ஜூலை 1- நம்பியூர் அருகே உள்ள கெட்டி செவியூரில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நிலகடலை பயிர் பாது காப்புக்காக, எலி, முயல் வேட்டைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சியில்  சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி  மன்றத் தலைவர் மகுடேஸ்வரன்,  துணைவட்டார வளர்ச்சி அலுவலர்  கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், ஊராட்சி பகுதியில் கள்ளத் தனமாக சாராயமோ காலவதி யான வெளிமாநில மதுவே விற்பனை  செய்தால் காவல்துறையின் வாட்சாப்  எண்ணிற்கோ ஊரட்சி மன்ற அலுவல கத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், முற்றிலும் பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு புதிய வீடு வேண்டியும், பழுதடைந்த தொகுப்பு வீடுகள் பழுது பார்த்தல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வேண்டி தீத்தாம்பா ளையம், சொக்குமாரிபாளையம், காளியப்பம்பாளையம், நிச்சாம்பா ளையம், பள்ளிபாளையம், நீலாம்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மனு அளித்த னர்.  கூட்டத்தில் கெட்டிசெவியூர் பகுதி யில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல்  ஆடிப் பட்ட நிலக்கடலை பயிரிங்பபட்ட நிலை யில்,பயிர் பாதுக்காப்புக்காக காலங் காலமாக அப்பகுதி இளைஞர்கள் எலி மற்றும் முயல் வேட்டைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் முயல் வனவி லங்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளதால் வனவிலங்கு பட்டியலிலிருந்து முயலை நீக்கி அனுமதி பெற்று தர வேண்டும் என பொதுமக்கள்  மனு அளித்தனர்.