districts

img

டாஸ்மாக் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

திருவாரூர், ஆக.16 - திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) 8ஆவது மாவட்ட பேரவை வெள்ளிக்கிழமை திருவாரூர் காசீஸ்  மருதம் ஹாலில் நடைபெற்றது.  பேரவைக்கு தலைவர் எஸ்.வைத்தி யநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் துவக்க  உரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, பொருளா ளர் இரா.மாலதி, மாநிலக் குழு உறுப்பினர் ஏ. பிரேமா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கி னர். தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் தொ டர்பாகவும், புதிய நிர்வாகிகளை அறி வித்தும் சிறப்புரையாற்றினார். அமைப்பின் கௌரவத் தலைவராக எஸ்.வைத்தியநாதன், தலைவராக பி.என்.லெனின், செயலாளராக வி.சிவபாலன், பொருளாளராக ஏ.முத்துவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 21 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக்  ஊழியர்களுக்கு பணி வரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை உள்ளிட்ட சட்ட உரிமைகளை வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர் களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.