districts

img

தமிழ்நாட்டுக்குரிய கல்வி நிதியை உடனடியாக வழங்கிட கோரிக்கை: பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் தீர்மானம்

மயிலாடுதுறை, மார்ச் 3-  மயிலாடுதுறையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்புக்குழு கூட்டம் வருவாய்துறை அலுவலக சங்க கட்டிடத்தில் இயக்கத்தின் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி மற்றும் தனபால் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு. மார்கிரேட் வரவேற்றார். மாநிலச் செயலாளர்  ஜெ. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகுத்து உரையாற்றினார். புதிய மாவட்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டு ரஞ்சித்குமார், சொளந்தரபாண்டியன் மற்றும் செல்வி. மார்கிரேட் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட அமைப்புக்குழுவில் உதவித்தலைமை ஆசிரியர் லீலாவதி, கொள்ளிடம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக அலெக்ஸ் நிக்கோலஸ், சீர்காழி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக மோகனா, செம்பனார்கோயில் ஒன்றியத்தில் சசிரேகா, குத்தாலம் ஒன்றியத்தில் செல்வராணி, மயிலாடுதுறை ஒன்றியத்தில் சுகந்தி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊடகக்குழுவில் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்மணி மற்றும் விசாலாட்சி, தஞ்சாவூர் மாவட்ட செயற்பாட்டாளர் சிவ ரவிசந்திரன் ஆகியோர் பேசினர்.  மாநிலச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒரு நபர் ஒரு பள்ளி செயல்பாடு மற்றும் அரசுப்பள்ளி மேம்பாட்டில் இயக்க பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் கிராமக்குழு அமைப்பது, கிராமங்களில் உள்ள அரசு பள்ளியின் வளர்ச்சி குறித்து பள்ளி மேலாண்மை குழுவில் வலியுறுத்துவது மற்றும் அதனை குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதித்து, அதனை தீர்மானமாக நிறைவேற்றுவது என்றும், தமிழ்நாட்டு கல்விக்குரிய நிதியான ரூ.2152 கோடியை ஒன்றிய அரசாங்கம் உடனடியாக விடுவிக்கக் கோரியும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.