மதுரை, மே 29- மதுரை மீனாட்சி கல் லூரி, அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, பாத் திமா கல்லூரி முதல்வர் களை சந்தித்து மாற்றுத்திற னாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், மாற்றுத்திற னாளி மாணவ, மாணவி யர்களுக்கு தமிழக அரசு ஆணைப்படி கல்வி கட்ட ணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் ஆகியவற்றிலி ருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்பு உரிமைக் கான சங்கத்தின் மதுரை மாந கர் மாவட்டக் குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.வீரமணி, மாவட் டச் செயலாளர் ஆ.பாலமுரு கன், மாவட்ட இணைச் செய லாளர் டி. குமரவேல் எம்.சி., மாவட்ட உதவித் தலைவர் பா.பழனியம்மாள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் கள் ஆகியோர் செவ்வா யன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.