திருச்சிராப்பள்ளி, அக்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை தாலுகா செயலாளர் கோபாலகிருஷ்ணன் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக மணப்பாறை கிளை மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், ‘திருச்சி வண்ணாங்கோவிலில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரி முடிந்து சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். எனவே இந்த பேருந்து நிறுத்தத்தில் கூடுதல் பேருந்துகள் நின்று செல்ல நட வடிக்கை எடுத்து விபத்துகளை தவிர்க்க உதவ வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்திருந்தார்.