districts

img

புதுதில்லியில் குடியரசு தின விழா என்சிசி அணிவகுப்பில் ஏவிசி மாணவர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை, பிப்.25 - புதுதில்லியில் நடந்த குடி யரசு தின விழா என்சிசி  மாணவர்களின் அணி வகுப்பில் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி  கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கல்லூரிக் கும் மயிலாடுதுறை மாவட் டத்திற்கும் பெருமை சேர்த்து ள்ளனர். புதுதில்லியில் நடை பெற்ற 73 ஆவது குடியரசு தின விழாவில் 8 ஆவது தமிழ்நாடு பெட்டாலியன் என்சிசி கும்பகோணம் சார்பாக ஏவிசி கல்லூரியின் என்சிசி மாணவர்கள் ஆர்.மணிமாறன், மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மற்றும் பா.லோகேஸ்வரன் மூன்றாம் ஆண்டு பொருளா தாரத் துறை மாணவர்கள் குடியரசு தலைவருக்கு வழங்கப்பட்ட என்சிசி மாண வர்களின் அணிவகுப்பில் கலந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ள னர். இவர்களை ஏவிசி கல்வி  நிறுவனங்களின் நிர்வாக அதி காரி நீதியரசர் கே.வெங்கட் ராமன், என்சிசி அதிகாரி பாலாஜி, பேராசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியா ளர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.