தஞ்சாவூர், ஏப்.19-
தஞ்சாவூர் கரந்தையில் 1,400 ஆண்டுகள் பழமையான கருணா சுவாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் கோயில் குளம் ரூ.2.15 கோடி மதிப் பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இக்கோயில் குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தடை பட்டதால் குளம் குட்டை போல் வறண்டு காணப்பட்டது. மேலும், குளத்தை சுற்றி பல இடங்களில் குடியிருப்புவாசிகள் குளக்கரையை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
இந்நிலையில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க இப்பகுதி மக்கள் 2019-ஆம் ஆண்டு தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட னர்.
இதைதொடர்ந்து, தஞ்சாவூர் மாநக ராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு, குளத்தை சுற்றி நான்கு கரையிலும் நடைபாதை, சாய்வுத்தளம், சுற்றுச் சுவர், படித்துறை, அலங்கார மின் விளக்குகள், சாய்வு நாற்காலிகள், எவர் சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக் கப்பட்டு வருகின்றன. மேலும் குளத்தின் தூர்வாரும் பணியின் போது கண்டு பிடிக்கப்பட்ட 9 சுடுமண் உறைகிணறு களையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சு கம் பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் குளத்தில் புனித நீரை நிரப்பி அதை பரா மரிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழி வறை அமைத்து தர வேண்டும் என மேய ரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின் போது மாநகராட்சி செயற் பொறியாளர் ஜெகதீசன், பொறியாளர் கார்த்தி, மாநகராட்சி மண்டலத் தலை வர் புண்ணியமூர்த்தி, மாமன்ற உறுப்பி னர் சுகந்தி துரைசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.