மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் தலையுடையவர் கோவில்பத்து கிரா மத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ரிஷிபாலன் (17). இவர் பள்ளிகளிடையே நடைபெற்ற ஓட்டப்பந்தயப் போட்டியில் பங்கேற்ற போது மயங்கி விழுந்து எதிர் பாராதவிதமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இறந்த மாணவரின் பெற் றோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோ லையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கி ஆறுதல் கூறினார். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் உடனி ருந்தனர்.