districts

img

வசதி உள்ளவர்களை இணைத்து வெளியான வறுமைகோட்டு பட்டியலை ரத்து செய்க

பொன்னமராவதி, ஜூலை 25 -

    தகுதியானவர்களை வறுமை கோட்டுப் பட்டியலில் இணைக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் முள்ளிப்பட்டி ஊராட்சியில் தகுதியான நபர்கள் விடுபட்டும், தகுதியில்லாத நபர்களை சேர்த்தும் வெளியான வறுமைக்கோட்டு பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உடனே உரிய ஆய்வு மேற்கொண்டு தகுதியுள்ள அனைவரையும் வறுமை கோட்டுப் பட்டியலில் இணைத்து வெளியிட வேண்டுமென வலியுறுத்தி, 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

   இந்நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் சி.பாண்டியன் தலைமை வகித்தார்.

    ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் முன்னிலை வகித்தார். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 கிராம ஊராட்சிகளிலும், இதுபோல குளறுபடிகள் உள்ள நிலையில், தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி, ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தகுதியுள்ள நபர்களை பட்டியலில் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.