districts

ஊரக வேலை திட்ட நிதியை குறைப்பது கிராமப்புற மக்களை கடுமையாக பாதிக்கும்!

இராமநாதபுரம், பிப்.12- ஊரக வேலை உறுதித் திட்ட  நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டு  வருவதால் கிராமப்புறத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்  வாதாரத்தை கடுமையாக பாதிக் கும் என்று கே.நவாஸ்கனி எம்.பி  பேசினார். நாடாளுமன்றத்தில் நிதிநிலை  அறிக்கை மீதான விவாதத்தில்  பங்கேற்று இராமநாதபுரம் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது: மெட்ரோ திட்ட நிதி எங்கே? பீகார் மாநிலத்திற்கு தேர்தல்  வர இருப்பதால் பல திட்டங்களை வாரி வழங்கிய ஒன்றிய அரசு,  தமிழ்நாடு முன்வைத்த நெடுஞ் சாலை திட்டங்கள், ரயில்வே திட்  டங்கள், கோவை, மதுரை மெட்ரோ  ரயில் நிதி, மதுரை எய்ம்ஸ் நிதி  என எதைப் பற்றியும் வாய் கூட  திறக்காதது அநீதியானது. வருமானவரிச் சலுகையை கொடுத்து, மறைமுகமான வரிச் சுமைகளையும் விலைவாசி ஏற் றத்தையும் அடித்தட்டு மக்கள் தலையில் சுமத்துகிறது. இந்த வரிச்சலுகையின் மூலமாக கிட்டத்  தட்ட 2 கோடி பேர் மட்டும் தான் பயன டைவார்கள்.

மானியங்கள் வெட்டி சுருக்கப்படுகிறது

140 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில் 138 கோடி மக்கள் பயன்படக்கூடிய வகை யில் விலைவாசியை குறைப்பதற் கான எந்த சிறப்பு திட்டங்களும் இல்லை, வேலைவாய்ப்பு திண்  டாட்டம் தலை விரித்து ஆடுகிறது.  அதற்கு எந்த மாற்று திட்டங்களும் இல்லை. பெட்ரோல் டீசல் விலை குறைப்பிற்கான எந்த அறிவிப்பும் இல்லை. உர மானியம், எரி பொருள், கேஸ் சிலிண்டர் மானியம்  உள்ளிட்ட மானியங்கள் எல்லாம் குறைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான தொகை ஒவ்வொரு நிதி ஆண்  டிற்கும் குறைக்கப்பட்டு கொண்டே வருவது அடித்தட்டு கிராமப்புற  மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்  கக் கூடிய செயல். கிராமப்புறங்களை நகர்ப் புறத்தோடு இணைப்பதற்கு, பேரூ ராட்சிகளோடு நினைப்பதற்கு கூட  தற்போது அந்தப் பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் அதற்கு இந்த வேலை உறுதித் திட்டம் பறி போகிவிடும் என்ற எண்ணத்தில் தான். சிறுபான்மை மக்களுக்கு எதி ரான பார்வையை பாஜக அரசு  கடந்த 10 ஆண்டு காலம் தொட ர்ந்து விரிவாக்கிக் கொண்டே தான் சென்று கொண்டிருக்கிறது.  அதற்கு இந்த நிதிநிலை அறிக் கையும் விதிவிலக்கு இல்லை என்ற வகையில் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உத வித்தொகை தொடர்ந்து குறைக்  கப்பட்டு கொண்டு வருவதிலிருந்து  நாம் பார்க்க முடிகிறது.  பட்டியல் சமூகத்திற்கும் பழங் குடியினருக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் வழங்கப்படும் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப், போஸ்ட்  மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்ற கல்வி  உதவித்தொகைகள் கடந்த நிதி நிலை அறிக்கையில் 6,360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 760 கோடி ரூபாய் செலவு  செய்யப்படவில்லை.

விளம்பரம் தேடும் பிரதமர் வீடு கட்டும் திட்டம்

பாஜக அரசு தொடர்ந்து நாடு  முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை பெரும் சாதனையாக குறிப்பிடுகிறது.  தற்போது கூட மூன்று கோடி வீடு களை புதிதாக கட்டப் போவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்தத் திட்டத்தின் மூலம் வெறும் விளம்பரத்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசு, அந்தத் திட்டம் எப்  படி செயல்படுகிறது என்பது குறித்து எந்த அக்கறையும் இல்லா மல் செயல்பட்டுக் கொண்டிருக்கி றது.  இந்த திட்டத்திற்கு கடந்த நிதி நிலை அறிக்கையில் 54 ஆயிரத்து  500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்  யப்பட்டது. அதில் ரூ.32,400 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.22,100 கோடி செல விடப்படவில்லை.  இந்தத் திட்டத்திற்காக ஒதுக் கப்படும் பணம் என்பது ஒரு வீடு  கட்டுவதற்கு ஒன்றிய அரசு 1,11, 100 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. மாநில அரசு 1,72,900 ரூபாய் வழங்குகிறது.   இப்படி இருக்கும் நிலையில் ஒரு வீடு கட்டுவதற்கு 2,83,900  ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரு வீட்டினை முழு மையாக கட்டி முடிக்க முடியாது. எனவே, இன்றைக்கு இருக்கக்  கூடிய விலைவாசிக்கு ஏற்றாற் போல் அந்த நிதியை ரூ.5 லட்சமாக  உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.