திருச்சிராப்பள்ளி, மார்ச் 4- திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976-ஆம் ஆண்டு கட்டப்பட்ட காவிரி பாலத்தில் உள்ள 192 அதிர்வு தாங்கிகளில் அவ்வப்போது பழுது ஏற்பட்டது. இத னால் பாலம் வலுவிழக்கும் நிலை ஏற் பட்டது. இந்நிலையில், பாலத்தை முழுமையாக சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தர விட்டார். இதையடுத்து பாலத்தில் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ரூ.6.84 கோடி ஒதுக்கப்பட்டது. இதனால், கடந்த செப்டம் பர் முதல் பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது பாலத்தின் அனைத்து பணிக ளும் நிறைவடைந்த நிலையில், சனிக் கிழமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.