districts

img

விலைவாசி உயர்வை கண்டித்து மாதர் சங்கம் நூதனப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.8- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடி அரசை கண்டித்தும், ரேசன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி புற நகர் மாவட்டக் குழு சார்பில்  லால்குடியில் ‘பண்டிகை பஜார்’ என்ற தலைப்பில் நூதனப் போராட்டம் நடை பெற்றது.         போராட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் விசாலாட்சி தலைமை வகித்தார். கோரிக் கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் லிங்க ராணி, மாவட்ட நிர்வாகிகள் யமுனா, மல்லிகா ஆகி யோர் பேசினர். மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றியத் தலைவர் ஜெயராணி, லால் குடி ஒன்றியத் தலைவர் சாரதா,  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர் பங் கேற்றனர்.