திருச்சிராப்பள்ளி, மே 11- கோடை வெயில் மக்களை வதைத்து வந்த நிலையில் திருச்சி புறநகர் மாவட்டப் பகுதிகளில் வெள்ளியன்று பரவ லாக மழை பெய்தது. மாவட்டம் முழு வதும் 282.1 மி.மீ மழை பதிவானது. இந்நிலையில் அந்தநல்லூர் ஒன்றியப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்ததில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடந்த 10 மாதமாக மழை இல்லாமல், கால்வாய் களில் தண்ணீரும் கிடைக்காமல் அந்த நல்லூர் ஒன்றியப் பகுதிகளில் பெட்ட வாய்தலை, பெருகமணி, சிறுகமணி, திருப்பராய்துறை, அணலை, கொடியா லம், புலிவலம் பகுதிகளில் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் ஆழ்குழாய் பாசனத்தின் மூலம் விவசாயிகள் வாழை பயிரிட்டு இருந்தனர். போதிய தண்ணீர் இல்லாமல் கதிர் விடும் நிலையிலும், பூவும் பிஞ்சுமாய், அரைகுறை விளைச்சலோடு கருகி வந்தது. இந்நிலையில், மழை பெய்யாதா என ஏக்கத்தில் இருந்த விவசாயிகளுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்த மழை பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே மழை இல்லாமல் கருகிய வாழை மற்றும் சூறை காற்றில் ஒடிந்த வாழைகளை சாியாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.