districts

img

கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களின் பெரும் மரியாதையை வென்றெடுத்தவர்

சங்கரய்யா மறைவுக்கு ராகுல்காந்தி எம்.பி., இரங்கல்

புதுதில்லி, நவ.16- கட்சி வேறுபாடின்றி அனைத்து  தரப்பு மக்களின் பெரும் மரியாதை யை வென்றெடுத்தவர் மரியா தைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரர், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா என்று காங்கி ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி இரங்கல் தெரி வித்துள்ளார். தோழர் என்.சங்கரய்யா மறைவு செய்தியறிந்து, அவரது  மகன் சந்திரசேகருக்கு ராகுல் காந்தி இரங்கல் கடிதம் அனுப்பி யுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தங்களது தந்தை திரு.சங்க ரய்யா அவர்களது மறைவு செய்தி யறிந்து மிகவும் வருத்தமடைந் தேன். அவரது மறைவால், நாம் அனைவருமே, தன்வாழ்நாள் முழு வதிலும் அநீதிகளுக்கு எதிராக போராடிய ஒரு மாபெரும் தலை வரை இழந்திருக்கிறோம். அவரது  பண்புகளின் வலிமையே அவரது  மெச்சத்தக்க அரசியல் பயணத்  தில் உறுதுணையாக இருந்தி ருக்கிறது. மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் மாணவராக படித்துக் கொண்  டிருந்த காலம் முதலே, அவர் தனது கொள்கைகளுக்காக அச்சமின்றி போராடியுள்ளார். விடுதலை இயக்கத்தின்போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்தது முதல், நாடு விடுதலைப் பெற்ற பிறகு  பல்வேறு மக்கள் போராட்டங் களை நடத்தியது வரை ஒரு போதும் அவர், சமரசம் செய்து கொள்ளவில்லை; பணிந்து போகவில்லை. எப்போதுமே அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரி மைகளுக்காக நின்றவர். அவ ரது துணிச்சலும், தீர்மானகரமான  செயல்பாடும் கட்சி வேறுபாடு களின்றி அனைத்துத் தரப்பு மக்க ளின் மரியாதையையும் வென்றெ டுத்தது. அமைப்பை உருவாக்கி கட்டி வளர்த்ததில் அவர் ஒரு மாபெரும் தலைவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யை உருவாக்குவதிலும் வளர்த்தெடுப்பதிலும் அவரது  மிகப் பெரும் பங்களிப்பு  என்றென்றும் நினைவுகூரத்தக் கது. இன்னும் முக்கியமாக அவ ரது வாழ்க்கை உண்மையிலேயே வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை; அவரது வாழ்நாள் முழுவதிலும் அவரால் ஆகர்ஷிக்கப்பட்ட அனைவரும் அவரை இழந்து தவிக்கிறார்கள். அவரது மறைவால் தங்க ளுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தை யும், வேதனையையும் என்னால் உணர முடிகிறது. எனவே இத யப்பூர்வமான இரங்கல்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டு கிறேன். எனது எண்ணங்களும், வேண்டுதலும் தங்களுடனும், தங்களது குடும்பத்தினரின் து யரத்துடனும் இணைந்திருக்கி றது. இவ்வாறு ராகுல்காந்தி கூறி யுள்ளார்.