மயிலாடுதுறை, ஜூலை 16 -
தமிழ்நாடு முதலமைச்சர் விளை யாட்டு கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் மயிலாடு துறையில் கடந்த மாதம் நடைபெற்றன.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் வாலிபால் மற்றும் கபடி ஆகிய போட்டிகளில் மயிலாடு துறை மாவட்ட காவலர் அணி முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ள மாநில விளை யாட்டுப் போட்டியில் இவர்கள் பங்கேற் கின்றனர்.
முன்னதாக, மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ள காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா நேரில் சந்தித்து வாழ்த்து தெரி வித்தார். மயிலாடுதுறை சாய் விளை யாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. சீருடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஷா மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.