மயிலாடுதுறை, மார்ச் 21 - மயிலாடுதுறை மாவட்டத் தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மையங் களிலிருந்து ஏற்றிச் செல்ல போதுமான அளவில் லாரி களை அனுப்பாததால் ஒவ் வொரு மையங்களிலும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கும் அவலம் நீடித்து வருகிறது. சம்பா சாகுபடியில் அறு வடை செய்யப்பட்ட நெல் மணிகளை கொள்முதல் செய்வதற்காக மயிலாடு துறை மாவட்டத்தில் நீடூர, மணல்மேடு, மங்கநல்லூர், பெரம்பூர், இலுப்பூர், தில்லை யாடி, பொறையார், பரச லூர், மாமாக்குடி, மேலப் பெரும்பள்ளம், கீழப்பெரும் பள்ளம், கீழையூர், மணக் குடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தமிழ் நாடு நுகர்பொருள் வாணி பக் கழகம் சார் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டு செயல் பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையங்களுக் கும் தேவையான சாக்குகள், சணல், மை போன்றவைகள் தேவையான அளவு வழங்கப் படவில்லை. நெல் மூட்டை களை மூடிவைத்து பாது காக்க தார்ப்பாய்களும் வழங் கப்படாத நிலையில் அன்றா டம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டை களை ஏற்றிச் செல்ல போது மான அளவிற்கு லாரிகளை மையங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்காததால் ஒவ்வொரு மையத்திலும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக் கின்றன. இதனால் ஆன்-லைனில் பதிவு செய்து நெல்லை விற்பனை செய்ய வரும் விவ சாயிகள், தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் இறக்கி வைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் கடந்த மாதம் பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து போன நிலையில், மீண்டும் மழை பெய்தால் என்ன செய்வது என விவசாயி களும், கொள்முதல் நிலைய அதிகாரிகளும் குழம்பி யுள்ளனர். இதுகுறித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன் கூறுகையில், ஒவ்வொரு நெல் கொள் முதல் நிலையங்களுக்கும் தேவையான தார்ப்பாய்கள், சாக்கு பைகளை முறையாக வழங்காத அதிகாரிகள், போதுமான அளவு லாரி களையும் அனுப்பி வைக்கா ததால் விவசாயிகள்தான் பெருமளவிற்கு பாதிக்கப்படு கின்றனர். தேவைப்படும் பகுதி களுக்கு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்த நுகர் பொருள் வாணிபக் கழக அதி காரிகள், மையங்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முன்வருவதில்லை. எனவே உடனடியாக ஒவ்வொரு மையங்களிலும் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல லாரிகளை அனுப்பி வைக்க வேண்டுமென கோ ரிக்கை விடுத்துள்ளார்.