புதுக்கோட்டை, அக்.13- சிபிஎம் புதுக்கோட்டை நகரச் செயலாளராக புதுகை பாண்டியன் தேர்வானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகர மாநாடு புதுக்கோட்டை நகர்மன்றத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. மாநாட் டுக்கு கே.நாகராஜ், ஆர்.நிரஞ்சனா ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சிக் கொடியை மூத்த தோழர் எம்.ஜியாவுதீன் ஏற்றி வைத் தார். வரவேற்பு குழுத் தலை வர் என்.ராமச்சந்திரன் வர வேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கண்ணம் மாள் உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் எஸ்.கவிவர்மன், கவி ஞர் நா.முத்துநிலவன், காப் பீட்டுக் கழக ஊழியர் சங்க நிர்வாகி எம்.அசோகன், கட்சி யின் மாவட்டக் குழு உறுப் பினர் கி.ஜெயபாலன், மூத்த தோழர் எம்.முத்தையா ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மூத்த தோழர்கள் பெரி.குமாரவேல், எம்.ஜியாவு தீன், சண்முக பழனியப்பன், தீக்கதிர் செல்வம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டில் 9 பேர் கொண்ட நகரக் குழுவும், செயலாளராக புதுகை பாண் டியனும் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் நிறைவுரையாற்றினார். புதி தாக தேர்வு செய்யப்பட்ட செயலாளர் புதுகை பாண்டி யன் நன்றி கூறினார்.