புதுக்கோட்டை, மே 11-
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளா கத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார் பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் சமூக சீர் திருத்தப் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மை யாரின் முழு உருவச் சிலை யை காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன் கிழமை திறந்து வைத்தார்.
சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலை மைச் செயலாளர் முனை வர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு. இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் ஆகி யோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் மரு.வை. முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்ல பாண்டியன், மாவட்ட ஊரா ட்சிக் குழுத் தலைவர் த. ஜெயலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதி யழகன், புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் மரு.பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.