districts

img

புதுகை மக்கள் தொடர்பு முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை, ஏப்.13- புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் வரு வாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது.  முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, தொழி லாளர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், 1,029 பயனாளிகளுக்கு ரூ.2,17,30,452 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.  முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெய லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.