மயிலாடுதுறை, ஜன.25 - மயிலாடுதுறையில் பிப்ரவரி 2 முதல் 12 வரை 2 ஆவது புத்த கத் திருவிழா நடைபெறவுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2 ஆவது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலை மையில் நடைபெற்றது. இந்த மாபெரும் புத்தகத் திரு விழா தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 20 பேச்சாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழாவை சிறப் பாக நடத்த ஒவ்வொரு துறைக் கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை துறை சார்ந்த அலு வலர்கள் மேற்கொள்ள வேண் டும். புத்தகத் திருவிழா தொடர் பான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து 2 ஆவது புத்தகத் திருவிழாவிற்கான இலச்சி னையை மாவட்ட ஆட்சியர் வெளி யிட்டார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) மு.ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மு. மணிமேகலை, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ. யுரேகா, சீர்காழி வருவாய் கோட் டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.