மயிலாடுதுறை, பிப்.25- மயிலாடுதுறை மாவட்டம் கொள் ளிடம் அருகே இருவக்கொல்லை கிராமத்திலிருந்து தாண்டவன்குளம் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி முடிவுற்று ஆறு மாதம் ஆகிறது. இந்த நிலையில் மணல் லாரிகள் அதிக பாரத்துடன் இச்சாலை வழியாக செல்கின்றன. இதனால், இச்சாலை ஒரே மாத காலத்தில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சாலை தொடர்ந்து மோசமடைந்தால் கூழையார், தொடுவாய், பழையார், தாண்டவன்குளம், இருவக்கொல்லை, ஜீவாநகர் உள்ளிட்ட கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, கடலோர கிராம மக்கள் நலன் கருதி தார்ச் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.