மயிலாடுதுறை, டிச.15- மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராம ஊராட்சி, திருமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகா மில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா 91 பயனாளி களுக்கு 18.55 லட்சம் மதிப்பில் இலவச நலத்திட்ட உதவி களை வழங்கினார். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார், வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சுரேஷ், குமாரசாமி, சமூக பாதுகாப்புத் திட்டதனித்துணை ஆட்சியர் ஐ. கண்மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய சீலன் மற்றும் பலர் உடனிருந்தனர். சீர்காழி திருமுல்லைவாசல் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர், விதவை உத வித்தொகை, திருமண உதவித்தொகை என 29 பய னாளிகளுக்கு ரூ.5.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.