புதுக்கோட்டை. டிச.3 - கொரோனா பெருந் தொற்றால் உயிரிழந்த குடும் பங்களுக்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் தொடர் வாழ்வாதார நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நிவார ணப் பொருட்கள் வழங்கப் பட்டன. புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு கவிஞர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் ராஜா வரவேற்றார். நிகழ்வில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத் துரை, எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் ஆகியோர் பய னாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
நிகழ்வில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் என்.கண்ணம் மாள், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பா ளர் எம்.அசோகன், அறிவி யல் இயக்க மாநில செயற் குழு உறுப்பினர் அ.மணவா ளன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் ராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.