districts

img

மகப்பேறு உதவித்தொகை வழங்கல்

புதுக்கோட்டை, பிப்.20-  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர கத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமை யில் திங்கள்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் முதியோர் உதவித தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உத வித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட 335 மனுக்களை பொதுமக்கள் ஆட்சிய ரிடம் அளித்தனர். மனுக்களை பெற்று  கொண்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை கள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.      மேலும் தாட்கோ அலுவலகம் சார்பில்  ரூ.6000 மதிப்பிலான மகப்பேறு உத வித்தொகை மற்றும் தூய்மைப் பணியா ளர் நலவாரிய அட்டையினை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப் பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர். கணேசன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) அ.முத்துரெத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.