districts

விலையில்லா மிதிவண்டி வழங்கல்

தஞ்சாவூர், ஜூலை 29-  

     தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற விழாவில் 1,079 மாணவர்கள், 1,432  மாணவிகள் மற்றும் அருகாமையிலுள்ள 13 பள்ளி களைச் சேர்ந்த 2,511 மாணவ, மாணவிகளுக்கு தமிழக  அரசின் விலையில்லா மிதிவண்டிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.