districts

img

மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா தலைமை வகித்தார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், 155 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார்.