மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா தலைமை வகித்தார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், 155 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார்.