தஞ்சாவூர், ஆக.9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, பெருமகளூர் அரசு மேல் நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மாணவ-மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மணக்காடு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.குமார் தலைமை வகித் தார். பெருமகளூர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.கணேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மணக்காடு பள்ளியில் 37 பேருக்கும், பெருமக ளூர் பள்ளியில் 40 பேருக்கும் என மொத்தம் 77 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.