districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கல்

தஞ்சாவூர், செப்.26 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மாற்றுத்திற னாளிகள் 26 பேருக்கு, சுமார் ரூ.26 லட்சம் மதிப்பிலான, மூன்று சக்கர வாகனம் (ஸ்கூட்டி) வழங்கும் விழா, பேரா வூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடை பெற்றது.  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கு.ஜெயஸ்ரீ மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கி உரை யாற்றினார். நிகழ்ச்சியில், வட்டாட்சியர் இரா.தெய்வானை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி,  மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மேனகா, பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூ ராட்சி உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.