திருவாரூர், பிப்.16- சென்னையில் தமிழ்நாடு முதல மைச்சர் காணொலி காட்சி வாயி லாக, மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு வெள்ளியன்று நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளார். இதையொட்டி திருவாரூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் முன் னிலை வகித்தார். திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 171 பயனா ளிகளுக்கு ரூ. 91,47,465 மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி திருமண மண்டபத்தில் நடந்த விழா வில், மக்களுடன் முதல்வர் திட்டத் தின்கீழ் 2641 பயனாளிகளுக்கு ரூ.2.14 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் ஆகியோர் வழங்கினர். அரியலூர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். இதுவரை 1,733 பயனாளி களுக்கு ரூ.4.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன என ஆட்சியர் தெரிவித் தார். இந்நிகழ்ச்சியின் நேரலை கீழப் பழுவூர் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவ லக மின்னணு வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடந்த மக்களு டன் முதல்வர் நிகழ்வில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என். கௌதமன், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் ஆர்.பேபி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். பின்னர் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.