அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை அமைத்துத் தருக!
குறைதீர் கூட்டத்தில் மனு
திருச்சிராப்பள்ளி, டிச.18- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்சி மாநகர் பகுதியில் ஜவுளிக் கடை, நகைக்கடை, பாத்திரக் கடை, ஸ்டேஷ்னரி கடை மற்றும் மளிகைக் கடை உட்பட பல வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவ னங்களில் பல ஆயிரக்கணக்கான ஊழி யர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலான ஊழியர்கள் படித்து விட்டு வேலை கிடைக்காததாலும், குடும்ப வறுமை-சூழ்நிலை காரணமாக வும், ஆண்டு முழுவதும் விவசாய வேலைகள் கிடைக்காத காரணத்தினா லும் இளம் பெண்கள் மற்றும் இளை ஞர்கள் இந்த வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனங்கள் காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணிவரை இடைவேளை இன்றி 12 மணி நேரம் செயல்படுகிறது. இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, உணவு இடைவேளை மற்றும் தேநீர் அருந்து வதற்கு ஏற்ப சுமார் ஒரு மணி நேரம் ஓய்வு தருகிறார்கள். கிட்டத்தட்ட 11 மணி நேரம் இந்த ஊழியர்கள் தொடர்ந்து பணி புரிந்து வருகின்றனர். பல வர்த்தக நிறுவனங்களில் ஊழி யர்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்து கொடுக்கவில்லை. இதனால் ஊழியர்கள் தொடர்ந்து 11 மணிநேர மும் நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள் வந்தாலும், வராவிட்டாலும் இந்த ஊழியர்கள் தொடர்ந்து நின்று கொண்டே தான் இருக்க வேண்டியுள்ளது. இதனால் அந்நிறுவனங்களில் பணி புரியும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு (குறிப்பாக 35 வயதிற்கு மேல்) உடல்நலக் கோளாறு ஏற்படுவது டன், 40 வயதிற்கு மேல் அவர்கள் எந்த விதமான பணிகளும் செய்ய முடியாத நிலை உருவாகிறது. இந்நிறுவனங்க ளில் பணிபுரியும் ஊழியர்களை ஒரு குறிப்பிட்ட வயது வரை பணியில் வைத்துக் கொண்டு, அதன்பிறகு நிறுத்தி விடுகின்றனர். இதனால், இவர் களின் எதிர்காலம் கேள்விக்குறியா கிறது. எனவே திருச்சி மாநகரில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும், அமர்வ தற்கு ஏற்ப இருக்கைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம் துவக்கம்
புதுக்கோட்டை, டிச.18 - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்கம் மையத்தினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது எவ்வாறு, நாம் செலுத்திய வாக்கினை யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்ப்பது என்பது குறித்து அறிந்து கொள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையம் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த செயல்முறை விளக்கம் மையம், திங்களன்று (டிச.18) முதல் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை செயல்பட உள்ளது. வாக்காளர்கள் இந்த செயல்முறை விளக்க மையத்தினை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த மையம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் செயல்படும்.
பயிர் காப்பீட்டுத் தொகை எப்போது வழங்கப்படும்? 19 கிராம விவசாயிகள் சாலை மறியல்
மயிலாடுதுறை, டிச.18 - கடந்த 3 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததால், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை முக்கூட்டில் விவசாயிகள் திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவிளையாட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட நல்லாடை, கொத்தங்குடி, அரசூர், எரவாஞ்சேரி, திரு விளையாட்டம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காத தால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன், அரசூர் முரளி, அரும்பாக்கம் சேகர், வேலு உட்பட 50-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் நல்லாடை முக்கூட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன், காவல் ஆய்வாளர்கள் சந்திரா, கருணா கரன், முன்னாள் எம்எல்ஏ அருள்செல்வன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ‘விரைவில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கரூர், டிச.18 - திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையின் நீர் மட்டம் திங்க ளன்று காலை 83.24 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு 10194 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அமராவதி ஆற்றில் உபரிநீரை முழுமையாக திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமராவதி வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதி களில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்ப தையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டு வதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெள்ளநீர் புகும் அபாயமுள்ள அமராவதி கரை யோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறி அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்குமாறு கரூர் மாவட்ட ஆட்சி யர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டை ஊருக்கு வெளியே நடத்தக் கோரிக்கை
புதுக்கோட்டை, டிச.18 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியி லுள்ள தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு விழாவை ஊருக்கு வெளியே நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அந்த மக்கள் அளித்த மனுவில், “தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டியை ஊருக்குள் நடத்துவதால் எங்க ளுக்கு பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. ஏராள மான வாகனங்கள் சுமார் 10 நாட்கள் வந்து செல்வதால் சாலை சேதமடைகிறது. ஊர் முழுவதும் கழிப்பறையாக மாறிவிடுகிறது. ஊருக்குள் மின் நிறுத்தம் செய்யப் படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படு கிறது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டியை ஊருக்கு வெளியே நடத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குமரப்பா பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தஞ்சாவூர், டிச.18 - தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் விபத்தில்லா மல் மின்சாரம் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்த ரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளா ளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். குமரப்பா அறக்கட்டளை பொருளா ளர் அஸ்வின் கணபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் கமலக் கண்ணன், பேராவூரணி துணை மின் நிலைய உதவி பொறியாளர் விவேகானந்தன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் (கட்டு மானம்) லட்சுமணன், வணிக ஆய்வாளர் ஆரோக்கிய தாஸ் மற்றும் ஆசிரியர்கள்-மாணவர்கள் கலந்து கொண்ட னர்.
நிதி நிறுவனம் நடத்தி ரூ.29.96 லட்சம் மோசடி 4 பேர் கைது
புதுக்கோட்டை, டிச.18 - தனியார் நிதி நிறுவனம் நடத்தி கடன் வழங்குவ தாகக் கூறி 296 பேரிடம் ரூ.29.96 லட்சம் மோசடி செய்த 4 பேரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் ஞாயிற்றுக் கிழமை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அறந் தாங்கி பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் தனிநபர் கடன், மகளிர் குழுக் கடன் ஆகிய பெயர்களில் கடன் தருவதாகக் கூறி அதன் விண்ணப்பக் கட்டணம், செயலாக்கக் கட்டணம் என்ற பெயர்களில் பணம் வசூலித்துள்ளனர். இவ்வாறாக 296 பேரிடம் மொத்தம் ரூ.29.96 லட்சம் வரை மோசடி செய்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் புதுக்கோட்டை மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையில் கடந்த வாரம் புகார் அளித்த னர். இப்புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீ சார், தூத்துக்குடியைச் சேர்ந்த நிர்மல்குமார் (40), திருச்சி குண்டூர் நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபி (40), குணசேகரன் மனைவி தேவிகா (42), திருச்சி பீமநகரைச் சேர்ந்த ஜான் கென்னடி (34) ஆகிய 4 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
தஞ்சாவூர், டிச.18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி திரு மண மண்டபத்தில் (டிச.19) செவ்வாய்க்கிழமை மக்களு டன் முதலமைச்சர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் திங்கட் கிழமை ஆய்வு செய்தார். முகாமுக்காக செய்யப்பட் டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் விளக்கினர். பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
தெருவில் கிடந்த துப்பாக்கி போலீசிடம் ஒப்படைப்பு
திருச்சிராப்பள்ளி, டிச.18- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மகன்களான சீனிவாசன் மற்றும் விக்னேஸ்வரன் தங்களது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கிடந்ததை கண்டு, தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரமேஷ் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின்பு அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த துப்பாக்கி ‘ஏர் பிஸ்டல்’ என்ற வகையை சேர்ந்தது என தெரிந்தது. ஸ்பிரிங் இயக்கத்தில் செயல்படும் அந்த துப்பாக்கியானது 10 மீட்டர் ரேஞ்ச் உள்ளது. இதற்கு உரிமம் தேவையில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஆர்ம்ஸ் ஆக்ட் பிரிவின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி, திருச்சிக்கு பயணிகள் ரயில் இயக்க கோரிக்கை
தஞ்சாவூர், டிச.18 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் பட்டுக்கோட்டை வட்டக் கிளை சார்பில் ஓய்வூதியர் தின விழா மற்றும் 75 வயது நிறைந்த ஓய்வூதி யர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, சங்கத்தின் வட்டத் தலைவர் கண.கல்யாணம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் த.சந்திரமோகன் வர வேற்றார். 75 வயது நிறைவடைந்த ஓய்வூதி யர்களைப் பாராட்டி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் வெ.அன்புச்செல்வன் சிறப்புரை யாற்றினார். வட்டப் பொருளாளர் சோம.ஆறுமுகம் நன்றி கூறினார். சென்னை - எழும்பூர் - இராமேஸ்வரம் தினசரி இரவு நேர விரைவு ரயிலை இரு முனைகளிலிருந்தும் திருவாரூர் - பட்டுக் கோட்டை - காரைக்குடி வழியாக இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக மது ரைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வழியாக திருச்சிக்கும் தினசரி பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரியலூர் - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதைகளுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை உட னடியாக செயல்படுத்த வேண்டும் என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா கடன்
ஆட்சியர் தகவல்
ஆட்சியர் தகவல் திருச்சிராப்பள்ளி, டிச.17 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற் போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயி களுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டி யில்லா கால்நடை பராமரிப்புக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், சுயஉதவிக் குழு கடன், கறவை மாடு, ஆடு வளர்ப்பு கடன் போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடப்பாண்டில் 1.4.2023 முதல் 13.12.2023 வரை 52,827 விவசாயிகளுக்கு ரூ.458.01 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் 15,059 விவசாயிகளுக்கு ரூ.63.19 கோடி வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் தேவைப்படும் விவசாயிகள் நில உரிமை தொடர்பான 10(1) கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்று, அடங்கல் சான்று, ஆதார் சான்று நகல், ரேசன் கார்டு நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் பெறலாம். கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பின ராக இல்லாத விவசாயிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தினை பெற்று ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உடனே உறுப்பினராக இணைந்து அனைத்து வகையான கடன்களையும் பெற லாம். சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பி னர் அல்லாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை சில்லறை விற்பனை மூலமும் பெற்றுக் கொள்ளலாம். கடன் பெறுவது தொடர்பான கூடுதல் விவ ரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் - திருச்சிராப்பள்ளி சரக துணைப் பதிவாளர்-7338749302, லால்குடி சரக துணைப் பதிவாளர் - 7338749303, முசிறி சரக துணைப் பதிவாளர் - 7338749304, திருச்சி ராப்பள்ளி மண்டல இணைப் பதிவாளர் - 7338749300. இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயி களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம் அமைச்சர் மக்களிடம் மனுக்களை பெற்றார்
மதுரை, டிச.18- ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை, தமி ழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று கோயம் புத்தூரில் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வார்டு 57-க்கு உட்பட்ட பகுதி பொதுமக்களிடம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு முகாமில் மக்களிடம் மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மண்ட லத் தலைவர் பாண்டிச் செல்வி மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முகாமில் அனைத்துத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மனு பெறும் இடங்களுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள பொறுப்பு அலுவலர்களிடம் கலந்து ரையாடினார்.
செப்டிக் டேங்க் கழிவை கொட்டிய வாகனம் பறிமுதல்
மதுரை, டிச.18- மதுரையில் மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் உறிஞ்சப்படும் செப்டிக் டேங்க் கழிவு நீரை மாநக ராட்சி அனுமதித்துள்ள 7 கழிவு நீரேற்று நிலையங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த நிலையில் தனியார் நிறுவன வாகனம், செப்டிக் டேங்க் கழிவு நீரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் மீன் மார்க்கெட் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள மழை நீர் வடிகாலில் கலந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரசரடி நீரேற்று மைய உதவி பொறியாளர் ரிச்சர்டுபால் மாட்டுத்தாவணி பகுதியில் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனை யடுத்து வாகன உரிமையாளர் இப்ராஹிம் ஷா மீது வழக்கு பதிந்து, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.