திருச்சிராப்பள்ளி, டிச.12 - சாலையோர வியாபாரிகளை விரட்ட முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தரைக்கடை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வெண்டிங் கமிட்டி அமைக்காமல், சாலையோர வியாபாரிகளின் வாழ்வா தார சட்டத்தை மீறி தரைக் கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது. மாநகராட்சி யின் அடையாள அட்டை பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாக சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவ மனை, ஏர்போர்ட், திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் தரைக்கடை நடத்து பவர்களை விரட்ட முயற்சிக்கிறது மாநகராட்சி நிர்வாகம். இதை கண்டித்தும் தரைக் கடை வியாபாரிகளுக்கு உடனே அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும், சிஐடியு திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் செவ்வா யன்று, தள்ளுவண்டி மற்றும் தரைக் கடை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருச்சி மாநகராட்சி அலுவ லகம் முன்பு சங்க மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தை விளக்கி சிஐடியு. மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க செயலாளர் செல்வி, பொருளாளர் சுரேஷ் ஆகியோர் பேசி னர். நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட் டத்தில் கலந்து கொண்டனர்.