திருச்சி,அக்.16- திருச்சி சத்திரம் பேருந்து நிலைய சாலையோர பகுதி களில் நரிக்குறவர் இனப்பெண்கள் இரண்டு தலைமுறை யாக ஊசி, பாசி விற்பனையை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரமாக இவர்கள் பொருட்களை தடிகள் கொண்டு தள்ளிவிட்டு, இங்கு விற்பனை செய்யக் கூடாது என மாநகராட்சி நிர்வாகத்தினர் தடுத்து வருகின்ற னர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, ஸ்ரீரங்கம் உதவி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து சிஐடியு தரைக்கடை, தள்ளு வண்டி சங்கம் தலைமையில் பழங்குடியின நரிக்குறவர் இனப்பெண்கள் திங்களன்று மாநகராட்சி அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் மாறன், தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான நரிக்குற இனப்பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாநகராட்சி மேயரிடம் மனு கொடுத்தனர்.