districts

அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து மறியல்

தஞ்சாவூர், ஜூன் 25-

    தஞ்சாவூர் மாவட்டம்,  பூதலூர் பகுதியில் தொ டர்ந்து நான்கு நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வந்தது. இது குறித்து, பொதுமக்கள் அதி காரிகளிடம் கேட்ட போது,  அலட்சியமாக பதில் அளித் துள்ளனர். இதனால் பொது மக்கள், வணிகர் சங்கத்தி னர், பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு, கார்,  ஆட்டோ ஓட்டுநர் உரிமை யாளர் சங்கம் உள்ளிட்ட பலர் பூதலூர் - செங்கிப் பட்டி சாலையில் வீரமர சன்பேட்டை மின்வாரிய துணை மின் நிலைய அலு வலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, பூதலூர் காவல்துறை ஆய்வாளர் ஜெகதீசன், வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதா னம் செய்தனர். பிறகு, வீரமரசன்பேட்டை மின்சார வாரிய உதவி பொறியாளர் பாஸ்கரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இனி வரும் காலங்களில் மின் வெட்டு இருக்காது என  உறுதியளித்ததின் பேரில்  போராட்டத்தை கைவிட்டனர்.