districts

img

உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்: தரங்கம்பாடியில் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை,ஜூன் 19- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட் பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்   மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஆறுபாதி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கற்றல் திறனை வளர்த்துக் கொள்ள அறிவுரை வழங்கினார்.   திருக்கடையூர் பகுதியில் உள்ள அரசு விதைப்பண்ணையினை நேரில் பார்வையிட்டு விதை சுத்திகரிப்பு முறையினை ஆய்வு செய்தார்,  திருக்க டையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் உரக்கிடங்கினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குறுவை சாகுப டிக்கு விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரங்கள் வழங்க  தேவையான உரங்கள் இருப்பு உள்ளதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகளுடன் கலந்து ரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்து, 18 விவசாயிக ளுக்கு ரூ.14,30,000 மதிப்பில் குறுவை பயிர் கடன்கள் வழங்கினார்.  தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல் பட்டு வரும் இ-சேவை மையத்தினை பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவை விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது,  கூட்டுறவு சங்கங்களின் மண்டல் இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார் , சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ்  ஆகியோர் உடனிருந்தனர்.