மதுரை, பிப்.3- மதுரை திருப்பரங்குன் றம் மலைக்கு இஸ்லாமி யர்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்; அவர்கள் வழிபாடு செய்யக்கூடாது; மேலே ஆடு, கோழிகள் பலி யிட தடைகள் விதிக்க வேண் டும்; மாமிசங்கள் உண்ணு வதற்கு தடை விதிக்க வேண் டும் என்று வலியுறுத்தியும், இந்துக்கள் மலையின் மீது பன்றிகளை பலியிட அனும திக்க வேண்டும் என்று கோரி யும் கடந்த சில தினங்களாக இந்து முன்னணியைச் சேர்ந் தவர்கள் சர்ச்சைகளை ஏற் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செவ்வா யன்று இந்து முன்னணி மற் றும் அதன் ஆதரவு அமைப்பு கள் சார்பில் திருப்பரங்குன் றம் கோவில் முன்பு ஆர்ப் பாட்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக தென் மாவட்டங்களிலிருந்து மத அமைதியை கெடுக்கும் நோக்குடன் இந்து முன்னணி அமைப்பு செயல்பட்டு வரு கிறது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். இதனிடையே அசாதா ரண சூழலை உருவாக்கும் நோக்கோடு சில விஷமிகள் தொடர்ந்து பொய் பிரச்சா ரத்தை பரப்பி வருகின்றனர். இதையொட்டி மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்கள் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை பொது அமை தியை பாதுகாக்கும் பொரு ட்டு, பாதுகாப்பை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணா போன்ற இயக்கங்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.