திருவாரூர், பிப்.13- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க ரூ.16.95 கோடியில் திருவாரூரில் 7250 மெட்ரிக் டன், குடவாசல் வட்டம் புதுக்குடியில் 4500 மெட்ரிக் டன் மற்றும் நன்னிலம் வட்டம் முடிகொண்டானில் 7000 மெட்ரிக் டன் என 18,750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நெல் சேமிப்பு தளங்களை தமிழ்நாடு முதல மைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் சாருஸ்ரீ பங்கேற்றார். முதுநிலை மண்டல மேலாளர் (நுகர்பொருள்) இராஜராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.