தஞ்சாவூர், ஜூன் 12-
தமிழர் அறம் அமைப்பு சார்பில், தமிழ்நாடு அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாண வர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா பட்டுக் கோட்டை தலைமை அஞ்சல கம் அருகில் தமிழர் அறம் தலைவர் சி.இராமசாமி தலைமையில் நடை பெற்றது. எம்.எம்.சுகுமார் முன்னிலை வகித்தார். கம்பன் பேரவை செய லாளர் கா.கவி வரவேற்றார்.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் சி.அகல் யாவுக்கு ரூ.7 ஆயிரம், தர்ஷினிக்கு ரூ.6 ஆயிரம், சத்யாவிற்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.18 ஆயி ரத்தை தமிழர் அறம் சார்பில், மொகிதீன் மரைக் காயர், சின்னப்பத் தமிழர், பாபு.ராஜேந்திரன் ஆகி யோர் வழங்கினர். இதே போல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்கள் சி.பாலகுருவுக்கு ரூ.6 ஆயிரம், ஜனனிக்கு ரூ.5 ஆயிரம், காவியாவிற்கு ரூ.4 ஆயிரம் என ரூ.15 ஆயி ரத்தை செ.கர்ணன், எஸ். ஆர்.கோபால், அண்ணா மலை ஆகியோர் வழங்கி னர்.