பெரம்பலூர், அக்.2- பெரம்பலூரில் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணி வதன் முக்கியத்துவம் குறித்து வலி யுறுத்தப்படுகிறது. அந்த வகையில், தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டி வந்த நபர்களுக்கு மரக் கன்றுகளையும் இனிப்புகளையும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகி யோர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி, போக்குவரத்துத் துறை, காவல் துறையினர் கலந்து கொண்டனர்.