districts

தூய்மைப் பணி தனியார்மயத்தை கண்டித்து வேலை நிறுத்தம்

திருச்சிராப்பள்ளி, மே 8-

   திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் தூய்மைப்  பணி தனியார்மயத்தை கண்டித்தும், நாள் ஒன்றுக்கு ஆண்களுக்கு ரூ.400, பெண்களுக்கு ரூ.350 என தினக்கூலி நிர்ணயித்தது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் நக ராட்சி அலுவலகம் முன்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

   பின்னர், நகராட்சி அதிகாரிகள் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், விவசாயத்  தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் பழனிச்சாமி, சிபிஎம் லால்குடி ஒன்றியச் செயலாளர் (பொ) பாலு,  கவுன்சிலர் சாரதாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

   இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் காண்ட்ராக்ட் முறை அமல்படுத்தி, ஊதியம் நிர்ணயிக்கும் வரை இங்கு ஊதியத்தை குறைக்க மாட்டோம். ஆட்  குறைப்பு செய்ய மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது