பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வருகை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
திருச்சிராப்பள்ளி, ஜன.18- பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20 ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணி வியாழனன்று ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள பஞ்சகரை பகுதியில் நடந்தது. இதனை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கார் மூலமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்வதை யொட்டி சாலை பகுதிகளில் மராமத்து பணிகள் நடக்கிறது. இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் பார்வையிட்டார். மேலும் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அரங்கநாதர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொண்டிக்குளத்தில் சிறு பாலம் கட்டித்தர கோரிக்கை
தஞ்சாவூர், ஜன.18 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிக்குளம் ஊராட்சியில், கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு செல்லும் வழியில் பொதுப் பணித்துறை யின் கிளை வாய்க்கால் குறுக்கிடுகிறது. இறந்தவர்களின் உடலை கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்பவர்கள் வாய்க்காலுக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக சம்பந்தப்பட்ட இடத்தில் சிறு பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டிக்குளம் ஊராட்சியைச் சேர்ந்த கிறிஸ்தவ சிறுபான்மை சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஜன.21 தஞ்சை, திருச்சியில் வாக்காளர் தின வினாடி - வினா போட்டிகள்
தஞ்சாவூர், ஜன.18 - 14 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர், திருச்சியில் பொது மக்களுக்கான வினாடி வினா போட்டிகள் ஜனவரி 21 அன்று நடத்தப்படுகிறது என்று தஞ்சாவூர், திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, தமிழ் நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற் பதை அதிகரிக்கும் நோக்கில், 14 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின்படி மாநில அளவி லான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி 21.01.2024 (ஞாயிறுக் கிழமை) அன்று காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் “https://www.erolls.tn.gov.in/Quiz2024” என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் 18.01.2024 மற்றும் 19.01.2024 (2 நாட்கள் மட்டும்) ஆகிய நாட்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். “இந்தியா வில் தேர்தல்கள்” என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இணையதளம் https://www.erolls.tn.gov.in/Quiz2024 , மாநில உதவி மைய எண். 1800-4252-1950, மாவட்ட உதவி மைய எண் 1950 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவரு மான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெறும் போட்டியில்; பங்கேற்க விருப்பமுள்ள பொதுமக்கள் https://www.erolls.tn.gov.in.in//Quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் -ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
தேனி, ஜன.18- எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளத்தில் அதிமுக கொடி ஏற்றுவதில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவா ளர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு புதனன்று பெரியகுளம் பழைய பேருந்து நிலை யத்தில் ஓ.பன்னீர்செல்வத் தால் அமைக்கப்பட்ட அதி முக கொடிக் கம்பத்தில் தற் போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழ னிச்சாமி தரப்பினர் கொடி யேற்றுவதற்காக தயார் செய்து வைத்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதர வாளர்கள் கொடிக்கம்பத் தில் தயார் செய்து வைக்கப் பட்டிருந்த கொடியை ஏற்றி பறக்க விட்டனர். இதனைக் கண்ட அதிமுக இபிஎஸ் தரப்பினர் ஆத்திரமடைந்து வாக்குவாதம் ஏற்பட்டு மோத லாக வெடித்தது. மேலும் இதில் அதிமுக இபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் முன் னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் தரப்பினர் ஏற்றிய கொடியை அவிழ்த்து விட்ட னர். அதன் பின்பு கொடிக்கம் பத்தை பிடித்து ஆட்டி சேதப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த காவல் துறையினர் இருதரப்பின ரையும் சமாதானப்படுத்தி மோதலை கட்டுப்படுத்தினர். இந்த நிகழ்வில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி யை ஒழிகவென்றும், இபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ் ஒழிகவென்று எதிர் எதிரே கோஷமிட்டனர். இதனால் பெரியகுளத்தில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.
நாளை பெரம்பலூரில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
பெரம்பலூர், ஜன.18-. சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 20 அன்று நடைபெறுகிறது. பெரம்பலூர் வட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலர் பெ.விஜயன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் (கி) கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ந.சரவணன் தலைமையிலும், குன்னம் வட்டம், சு.ஆடு துறை கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சு.சத்தியபாலகங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) இரா.மனோகரன் தலைமையிலும் 20.01.2024 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.