திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆதிரங்கம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு வழங்கும் ஆணையினை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் தலைமை வகித்தார். இதில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், ஊராட்சி எழுத்தர் இளந்திரையன், கிராம நிர்வாக அலுவலர் கோ.சி.மணி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.