districts

img

பிளாட்டுகளாக மாற்றுவதைத் தடுத்து விளை நிலங்களைப் பாதுகாத்திடுக

நாகர்கோவில், ஜூன் 27-

   கன்னியாகுமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படு வதை தடுத்து நிறுத்துமாறு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

   கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் செவ்வாயன்று (ஜுன் 27) நடைபெற்றது. கூட்டத்தில் சுசீந்திரம், தேரூர், திருப்பதி சாரம், பீமநகரி, சுங்கான்கடை பகுதிகளில் வயல்வெளிகளில் மண் நிரப்பி பிளாட்டு களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் நெல் விவசாயம் அழியும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளதாகவும்  விவசாயத்தை பாது காக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார்கள்.  

    குமரி மாவட்டம் நெல், வாழை, தென்னை, ரப்பர் விவசாயம் அதிக அள வில் செய்யப்பட்டு வருகிறது.  மாவட்டம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 7,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சாகுபடி பரப்பளவு 5,500 ஹெக்டேராக குறைந்துள் ளது. இதற்கு முக்கிய காரணம் விளை நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாற்றப் படுவது என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

   சுங்கான்கடை, திருப்பதிசாரம் பகுதி களில் விளை நிலங்களை அதிகாரிகள் பிளாட்டுகளாக மாற்ற அனுமதி அளித்துள் ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அதை தடுத்து நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட பிளாட்டுகளை ரத்து செய்ய வேண்டும்  என்று கோரிக்கை விடுத்தார் கள். இதைத்தொடர்ந்து ஆட்சியரும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்தார்.